ரிசர்வ் வங்கி அதிரடி: வங்கிகள் இதை செய்யாவிட்டால் தினமும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 இழப்பீடு

RBI Update: தற்போது ஆர்பிஐ சார்பில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 27, 2023, 07:57 AM IST
  • டீஃபால்டிங்கிற்கு முன் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
  • ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம்.
  • இந்த விதி ஏப்ரல் 26 முதல் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி அதிரடி: வங்கிகள் இதை செய்யாவிட்டால் தினமும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 இழப்பீடு

இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ஆர்பிஐ சார்பில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் புகார் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், தினமும் 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் நிறுவங்களிடம் தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Add Zee News as a Preferred Source

ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) CIBIL, Experian மற்றும் பிற அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் கேட்கப்படும்போது ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்புவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப வேண்டும். 30 நாட்களுக்குள் புகார் தீர்க்கப்படாவிட்டால், நிறுவனங்கள் தினமும் ரூ.100 அபராதம் வழங்கவேண்டும். 

டீஃபால்டிங்கிற்கு முன் தெரிவிக்க வேண்டியது அவசியம்

ஒரு வாடிக்கையாளர் டீஃபால்ட் நிலைக்கு செல்லவிருந்தால், அதை பற்றி புகாரளிக்கும் முன் அதை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும். இது தவிர வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க நோடல் அதிகாரிகள் பணியாற்றுவார்கள்.

மேலும் படிக்க | ஹரியானா மாநிலத்திலும் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் அரசுப் பணியாளர்கள்! DA 4% ஹைக்

இந்த விதி ஏப்ரல் 26 முதல் அமலுக்கு வருகிறது

கிரெடிட் பீரோவில் தரவு திருத்தம் செய்யப்படாததற்கான காரணத்தை விளக்குவதும் முக்கியம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கிரெடிட் பீரோ இணையதளத்தில் புகார்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இது தவிர, தனிநபர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை இலவச கடன் அறிக்கையும் அவசியம். புதிய விதிகள் நேற்றிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு அதாவது 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதமே, இதுபோன்ற விதிகளை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம்

விதிகளின்படி, புகார் தீர்க்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். கடன் பணியகங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை வழங்கும். 30 நாட்களுக்குப் பிறகும் புகார் தீர்க்கப்படாவிட்டால் இழப்பீடு வழங்க விதி உள்ளது. புகார்தாரருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும். கடன் வழங்கும் நிறுவனத்திற்கு 21 நாட்களும், கிரெடிட் பீரோவுக்கு 9 நாட்களும் வழங்கப்படும். 21 நாட்களுக்குள் வங்கி கடன் பணியகத்திற்கு தெரிவிக்கவில்லை என்றால், வங்கி இழப்பீடு வழங்கும். வங்கிக்கு தகவல் தெரிவித்து 9 நாட்களுக்குள் பழுது சரி செய்யப்படாவிட்டால், கிரெடிட் பீரோ இழப்பீடு வழங்கும்.

கூடுதல் தகவல்

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்திற்கு அதிக வட்டியை பெற வேண்டும் என்ற கருத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. பெரிய தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகள் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு 2.70 சதவீதம் முதல் நான்கு சதவீதம் வரை வட்டி தருகின்றன. வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் சேமிப்புக் கணக்குகளின் பங்கு மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்குகளுக்கு (Savings Account) மிகக் குறைந்த வட்டியையே வழங்குகின்றன.

கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி பாலிசி விகிதத்தை 2.50 சதவீதம் அதிகரித்து 6.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இவ்வாறான நிலையில், வங்கிகள் கடனுக்கான வட்டியை உடனடியாக அதிகரித்து வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றுவது போன்று, வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய வங்கி விரும்புகிறது. 

மேலும் படிக்க | தங்கத்தின் விலையை உயரச் செய்த பங்குச்சந்தையின் சரிவு! சென்செக்ஸ் நிஃப்டி சரிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News