#Cauvery: உண்ணாவிரத தேதியை மாற்றிய அ.தி.மு.க!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் அறிவித்த உண்ணாவிரத போராட்ட தேதியை மாற்றியது!

Last Updated : Mar 31, 2018, 06:20 AM IST
#Cauvery: உண்ணாவிரத தேதியை மாற்றிய அ.தி.மு.க! title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த வியாழன்கிழமையே முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நேற்று நடைபெற்றது.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த அலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசித்ததாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களுக்கும், இந்திய நீதித் துறைக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசின் வேதனை அளிக்கும் நடவடிக்கையை கண்டித்து வருகிற 3-ம் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்" என்று கூறிவிட்டு காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க தான் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டது போன்று அறிக்கை தயார் செய்துள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இது வரை எந்த அறிவிப்பும் இல்லை. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதி வரும் இன்று (சனிக்கிழமை) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

Trending News