அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் வீழ்த்த முடியாது - சிவசேனா!

தங்கள் தீர்ப்பின் மூலம் மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 24, 2019, 01:03 PM IST
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் வீழ்த்த முடியாது - சிவசேனா! title=

தங்கள் தீர்ப்பின் மூலம் மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவிக்கையில்.,
 
ரபேல் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். 

தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை வீழ்த்த முடியாது என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

17-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி 302 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 6 தொகுதிகளுக்கான முடிவு இழுபறியில் உள்ளது. பாஜக கூட்டணியின் மாபெரும் வெற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது மோடியின் வெற்றி அலை குறித்து சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News