பெரிய நோய்களுக்கு தீர்வு அளிக்கும் மிக சிறிய கிராம்புகள்...

வீட்டிலுள்ள கிராம்புகளை கொண்டு, குறிப்பிட்ட சில நோய்களுக்கு எவ்வாறு தீர்வு நிவாரணம் பெறுவது என்பதை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். 

Last Updated : Oct 30, 2019, 04:55 PM IST
பெரிய நோய்களுக்கு தீர்வு அளிக்கும் மிக சிறிய கிராம்புகள்... title=

வீட்டிலுள்ள கிராம்புகளை கொண்டு, குறிப்பிட்ட சில நோய்களுக்கு எவ்வாறு தீர்வு நிவாரணம் பெறுவது என்பதை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். 

கிராம்புகளில் அதிகளவு புரதம், இரும்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. பொதுவாக ஜலதோஷம் முதல் சளி வரை பல சிக்கல்களில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. செரிமானம், வாயு, மலச்சிக்கல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம்பு மிகவும் நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் சில துளி கிராம்பு எண்ணெயைக் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

இது தவிர, ஜலதோஷம் மற்றும் சளி பிரச்சனையின் போது முழு கிராம்புகளையும் வாயில் வைத்திருப்பது ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் மற்றும் தொண்டையில் வலியை போக்குகிறது. 

பெரும்பாலான மக்கள் துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறுகின்றனர். வயிற்றில் புண் இருக்கும் பட்சத்தில் வாயில் துர்நாற்றம் வீசும் என கூறப்படுகிறது. அத்தகைய மக்களுக்கு கிராம்பு மிகவும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகும். சுமார் 40-லிருந்து 45 நாட்களுக்கு முழு கிராம்புகளை உட்கொள்வதன் மூலம், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். 

முகத்தில் புள்ளிகள் அல்லது கருமையான சருமத்திற்கும் கிராம்பு நன்மை பயக்கும். ஃபேஸ்பேக் அல்லது கிராம் மாவுடன் கிராம்பு தூள் கலந்து பயன்படுத்தி வந்தால் முகச்சுருக்கம், போன்ற பிரச்சனைகள் நீங்கும். ஆனால் கிராம்பு தூள் மட்டுமே ஒருபோதும் முகத்தில் தடவக்கூடாது, ஏனெனில் அது மிகவும் வெப்ப தன்மை கொண்டது. 

கிராம்பினை தனியே பயன்படுத்துகையில் தலைமுடி அடிக்கடி விழும் நிலை ஏற்படலாம், இதற்கு தீர்வாய் கிராம்புகளை சிறிது தண்ணீரில் சூடாக்கி முகத்தை கழுவலாம். இது தலைமுடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க உதவும்.

Trending News