நரை முடி கருமையாக வளர இதை செய்தால் போதும்

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2022, 02:05 PM IST
  • தலைமுடியை கருமையாக்க நெல்லிக்காய்
  • வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக முடியும்
  • முடியை கருப்பாக்க இந்த 3 விஷயங்களை பயன்படுத்தவும்
நரை முடி கருமையாக வளர இதை செய்தால் போதும் title=

சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிட காரணமாகிறது. 25 முதல் 30 வயதில் முதன்முறையாக வெள்ளை முடி தோன்றும் போது, ​​நீங்கள் பீதி அடைய தேவையில்லை. இதற்காக நீங்கள் முடி சாயம் அல்லது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும்.

இளமையிலேயே வெள்ளை முடி வருவது ஏன்?
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், பிஸியான வாழ்க்கை முறை, வேலை அழுத்தம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள். இருப்பினும், இந்த சிக்கலை சரியான நேரத்தில் சமாளிக்க முடியும்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

முடியை கருப்பாக்க இந்த 3 விஷயங்களை பயன்படுத்தவும்

1. வெந்தய விதைகள்
ஆரோக்கியமான, வலுவான மற்றும் கருமையான கூந்தலைப் பெற, கண்டிப்பாக வெந்தய விதைகளைப் பயன்படுத்துங்கள். இதில் உள்ள சத்துக்கள் முடியை கருமையாக்க உதவுகிறது. இதற்கு, வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை விழுதாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் தலைமுடியில் தடவவும்.

2. மருதாணி
முடியை கருமையாக்க ரசாயன ஹேர் டையை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மருதாணி பயன்படுத்தலாம், ஏனெனில் இது ஒரு இயற்கை தீர்வு மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மருதாணி பொடியை தண்ணீரில் ஊற வைத்து, அதனுடன் காபி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலைமுடியில் தடவவும்.

3. நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடியை கருப்பாக்க உதவுவது மட்டுமல்லாமல், அதை மிகவும் வலிமையாக்குகிறது. நெல்லிக்காடை 2 வழிகளில் பயன்படுத்தலாம். இதை முராப்பா வடிவில் சாப்பிடலாம் அல்லது மருதாணியுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து சாப்பிடலாம். இதன் காரணமாக முடி இயற்கையாகவே கருப்பாக மாறும்.

 

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News