Cholesterol Signs: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தென்படும், ஜாக்கிரதை!!

Cholesterol Warning Signs: பொதுவாக அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் எளிதில் கண்டறியப்படுவதில்லை.  பல சமயங்களில் நம் உடலும் இதைப் பற்றிய அறிகுறிகளை நமக்கு அளிக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2022, 06:02 PM IST
  • நமது வாழ்வில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்வது மிக முக்கியமாகும்.
  • பொதுவாக அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் எளிதில் கண்டறியப்படுவதில்லை.
  • இரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால் நெஞ்சு வலி ஏற்படுவது இன்றைய காலத்தில் பொதுவானதாகி விட்டது.
Cholesterol Signs: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தென்படும், ஜாக்கிரதை!! title=

அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: நமது நரம்புகளில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் பல தீவிர நோய்களுக்கு மூலகாரணமாக அமைகிறது. இது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, கரோனரி தமனி நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஆகையால், கொலஸ்ட்ரால் பற்றி எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். பொதுவாக மோசமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. 

ஆகையால், நமது வாழ்வில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்வது மிக முக்கியமாகும். பொதுவாக அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் எளிதில் கண்டறியப்படுவதில்லை. இதற்காக லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், பல சமயங்களில் நம் உடலும் இதைப் பற்றிய அறிகுறிகளை நமக்கு அளிக்கிறது. இவற்றை நாம் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டால் நல்லது. 

நரம்புகளில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்:

1. சோர்வு

பொதுவாக, நமது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும் போது, ​​அடைப்பு காரணமாக, உடலின் பல பாகங்களில் ரத்த ஓட்டம் சரியாகச் செல்ல முடியாமல், ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், உடல் வலி மற்றும் தசைப்பிடிப்பு அதிகரிக்கிறது. மேலும், தசைகளில் வலியையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. 

மேலும் படிக்க | உடல் பருமன் பாடாய் படுத்துதா? காலை சிற்றுண்டியில் இதை சாப்பிடுங்க போதும்!! 

2. நெஞ்சு வலி

இரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால் நெஞ்சு வலி ஏற்படுவது இன்றைய காலத்தில் பொதுவானதாகி விட்டது. பெரும்பாலும் துவக்கத்தில் ஒரு வித அமைதியின்மை உணரப்படுகின்றது. பின்னர் நெஞ்சு வலி அதிகரிக்கத் தொடங்குகிறது. இதற்கு உங்கள் உணவில் இருந்து எண்ணெய் பொருட்களை விலக்குவது அவசியம்.

3. தொப்பை கொழுப்பு

உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர ஆரம்பித்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மெதுவான வளர்சிதை மாற்றத்தால் எடை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்,  நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

4. உயர் இரத்த அழுத்தம்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நமது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தம் இதயத்தைச் சென்றடைய அதிக முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ரத்த அழுத்தம் எனப்படும். ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பும் ஏற்படலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பலாப்பழம் சாப்பிட்ட பிறகு எந்த உணவுகளை உண்ணக் கூடாது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News