சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இந்த ஒரு அற்புத பழம்

நீரிழிவு நோயாளிகள் பலவிதமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் அவர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்காது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 6, 2022, 09:26 AM IST
  • நீரிழிவு நோய் கட்டுப்பாட்டு குறிப்புகள்
  • சர்க்கரை நோய்க்கு மாதுளம் பழம்
  • மாதுளம்பழம் நோய்களை எதிர்த்துப் போராடும்
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இந்த ஒரு அற்புத பழம் title=

சர்க்கரை நோய்க்கு மாதுளம் பழம்: நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். இரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது; அதன் சிக்கல்கள் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் காலைத் துண்டிக்கும் அளவுக்கான பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அத்தகைய பழத்தை சாப்பிட நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.

மாதுளம்பழம் நோய்களை எதிர்த்துப் போராடும்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள GIMS மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், ZEE NEWS இடம், மாதுளை எப்படி சர்க்கரை நோய்க்கு மட்டுமல்லாது பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்

மாதுளம்பழத்தில் காணப்படும் சத்துக்கள் 
மாதுளையில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை, அதன்படி வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை மாதுளம்பழத்தில் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இப்போது நாம் மாதுளை நுகர்வு ஏன் நமக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. நீரிழிவு நோய்க்கு பலன் தரும்
மாதுளை விதைகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும், இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தை போல் செயலப்படும். நார்ச்சத்து அதிகம் இருக்க நேரடியாக சாப்பிடுவது நல்லது, ஆனால் சாறு பிழிந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

2. இரத்த சோகையில் நன்மை பயக்கும்
உடலில் இரத்த பற்றாக்குறை உள்ளவர்கள் அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனத்தை எதிர்கொள்கின்றனர், அத்தகைய நிலை இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கும் இந்த நோய் வந்தால், கண்டிப்பாக மாதுளை சாப்பிடுங்கள், இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது மட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

3. கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன, இதன் மூலம் கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பழத்தில் உள்ள ஃபோலேட், பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News