பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2022, 11:15 AM IST
  • பூசணி விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
  • வேலை பளுவின் காரணமாக ஆற்றல் குறைவாகவே உள்ளது.
  • இது ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.
பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்! title=

பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், புற்று நோய் முதல், இதய ஆரோக்கியம் வரை உடல் நல பிரச்சனைகளுக்கு பூசணி விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூசணி விதைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அந்நிலையில் பூசணி விதைகள் பெரும் நன்மை பயக்கும், அதில் உள்ள நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்

பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி வராது.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

இதயத்தை ஆரோக்கியம் மேம்படும்

பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.எனவே இதனை தினமும் உட்கொள்ளலாம்.

ஆற்றல் அளவு அதிகரிக்கும்

இன்றைய காலக்கட்டத்தில் வேலை பளுவின் காரணமாக ஆற்றல் குறைவாகவே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இது ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராக இருக்கும். சத்தான மூலகம் ஆண்களுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. எனவே ஆண்கள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பூசணி விதைகளை உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொள்ளவும்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News