ஓபிஎஸ்-சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன்: திவாகரன் பேட்டி!

சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என திவாகரன் பேட்டி அளித்தார்!

Last Updated : May 14, 2018, 11:30 AM IST
ஓபிஎஸ்-சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன்: திவாகரன் பேட்டி! title=

சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என திவாகரன் பேட்டி அளித்தார்!

அம்மா அணியின் தலைவர் திவாகரன் மன்னார்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவை இனி அக்கா என்று அழைக்க மாட்டேன், சசிகலா படத்தை பயன்படுத்தமாட்டேன் அம்மா அணி என்று தனித்தே செயல்படுவோம் என்றார்.

சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது.

யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவின் விரோதத்திற்கு திவாகரன் தான் காரணம் எனக் கூறினார்.

Trending News