MLA தகுதிநீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ADMK கேவியட் மனு தாக்கல்!

எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கேவியட் மனு தாக்கல்! 

Last Updated : May 1, 2018, 03:04 PM IST
MLA தகுதிநீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ADMK கேவியட் மனு தாக்கல்!  title=

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு நேற்று ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வாங்கப்பட்டதாக தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் விமர்சித்தார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும் என சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார். 

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.  

இதை தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்பதால் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ'க்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Trending News