கேரளாவில் ஓகி புயலுக்கு 38 மீனவர்கள் பலி!

கேரளாவில் ஓகி புயலுக்கு பலியான மீனவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Dec 11, 2017, 11:25 AM IST
கேரளாவில் ஓகி புயலுக்கு 38 மீனவர்கள் பலி!  title=

ஓகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியான நிலையில் நேற்று கொச்சி வியாபின் கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் மிதந்த 2 மீனவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஓகி புயலுக்கு கேரளாவில் பலியான மீனவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

லட்சத்தீவில் மீட்கப்பட்ட 75 மீனவர்களை கடற்படையினர் நேற்று கொச்சிக்கு திரும்பினர். அவர்களில் 63 பேர் தமிழக மீனவர்கள். 12 பேர் கேரளா மீனவர்கள். மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிவித்து உள்ளது.

Trending News