ஜம்மு-ல் அசம்பாவிதம்! பாக். ராணுவம் அத்துமீறல்! 4 இந்திய வீரர்கள் மரணம்!

ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய  தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை (BSF) 4 ஜவான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். 

Last Updated : Jun 13, 2018, 08:47 AM IST
ஜம்மு-ல் அசம்பாவிதம்! பாக். ராணுவம் அத்துமீறல்! 4 இந்திய வீரர்கள் மரணம்! title=

ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய  தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை (BSF) 4 ஜவான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். 

ராம்கார் பகுதியில் பாபா சம்லியால் அவுட்போஸ்ட்டை இலக்கு வைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்னிஷ் குமார், ஏஎஸ்ஐ ராம் நிவாஸ், ஏஎஸ்ஐ ஜடேந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். 

மேலும் காயமடைந்த 3 வீரர்கள் ஜம்முவின் சத்வாரியில் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ராம்கர் மாவட்டத்தில் உள்ள பாபா சம்லியால் ஆலயத்தில் ஆண்டுதோறும் 'உர்ஸ்' நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா நெருங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் அத்தமீறி தாக்குதல் நடந்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

Trending News