போலீஸ் அபராதம் விதித்ததால் பைக்கை கொளுத்திய வாலிபர்

டெல்லியில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பைக்கை கொளுத்தியுள்ளார்.

Last Updated : Jan 2, 2020, 03:31 PM IST
போலீஸ் அபராதம் விதித்ததால் பைக்கை கொளுத்திய வாலிபர் title=

டெல்லியில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பைக்கை கொளுத்தியுள்ளார்.

புதுடெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ். இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை தடுத்து நிறுத்திய டிராபிக் போலீசார், அபராதம் விதித்தனர். 

இதற்கான செல்லானை அவரிடம் கொடுத்து, அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த விகாஸ், தனது பைக்கை திடீரென தீயிட்டு கொளுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News