ஜம்மு காஷ்மீருக்கு பிறகு ராஜஸ்தானில் லித்தியம் புதையல்! பதற்றத்தில் சீனா!

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2023, 08:59 PM IST
  • உலகின் மிகப்பெரிய அளவிலான லித்தியம் இருப்பு தற்போது பொலிவியாவில் உள்ளது.
  • லித்தியத்திற்காக இந்தியா இன்னும் சீனாவையே நம்பியிருக்கும் நிலை.
  • லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகம்.
ஜம்மு காஷ்மீருக்கு பிறகு ராஜஸ்தானில் லித்தியம் புதையல்! பதற்றத்தில் சீனா! title=

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் வேளையில் இந்தியாவில் அடுத்தடுத்து லித்தியம் கனிம இருப்பு கண்டுப்பிடிக்கப்பட்டு வருவது, உண்மையில் இந்தியாவிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது. ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு அதாவது GSI, இது குறித்து கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் காணப்படும் இருப்புக்களை விட மிக அதிகம் என கூறியுள்ளது. ராஜஸ்தான் நாகூர் பகுதியில் காணப்படும் இந்த இருப்பு மூலம் நாட்டின் 80 சதவீத லித்தியம் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள். இது இதுவரை நாட்டின் மிகப்பெரிய லித்தியம் இருப்பு என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா சீனாவை முந்திச் செல்வதோடு மட்டுமல்லாமல், லித்தியத்திற்காக சீனாவை சார்ந்திருக்க வேண்டியதில்லை. 

லித்தியத்திற்காக இந்தியா இன்னும் சீனாவையே நம்பியிருக்கும் நிலையில், இப்போது சீனாவின் ஏகபோகம் முடிவுக்கு வரும் என்றும், வளைகுடா நாடுகளைப் போல ராஜஸ்தானின் செல்வம் உயரும் என்றும் நம்பப்படுகிறது. சீனாவிடம் 5.1 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பு உள்ளது. உலக சந்தையில் லித்தியம் கனிமத்தில் ஏகபோக நிலையில் உள்ளது சீனா.

உலகின் மிகப்பெரிய அளவிலான லித்தியம் இருப்பு தற்போது பொலிவியாவில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா, சிலி, சீனா, அமெரிக்கா உள்ளது. சீனாவில் லித்தியம் இருப்பு மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது, ஆனால் அது உலக சந்தையில் ஏகபோகமாக உள்ளது. இந்தியா சீனாவிலிருந்து மொத்த லித்தியத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. 2020-21ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள லித்தியத்தை இறக்குமதி செய்திருந்தது, அதில் பாதிக்கும் மேற்பட்டவை சீனாவிடமிருந்து 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள லித்தியத்தை வாங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு, ராஜஸ்தானில் இவ்வளவு லித்தியம் இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சீனாவின் ஏகபோகத்தை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

மேலும் படிக்க | இந்தியாவின் ‘லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?

இரசாயன ஆற்றலைச் சேமித்து மின் ஆற்றலாக மாற்றும் லித்தியம்

லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகம். இது மொபைல்-லேப்டாப்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பிற சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் உலகின் மிக மென்மையான மற்றும் இலகுவான உலோகமாகும். காய்கறிக் கத்தியால் வெட்டி தண்ணீரில் போட்டு மிதக்கும் அளவுக்கு மிருதுவானது. இது இரசாயன ஆற்றலைச் சேமித்து மின் ஆற்றலாக மாற்றுகிறது. இன்று வீட்டில் உள்ள அனைத்து சார்ஜ் செய்யக்கூடிய எலக்ட்ரானிக் மற்றும் பேட்டரியால் இயங்கும் கேஜெட்டிலும் லித்தியம் உள்ளது. இந்த காரணத்திற்காக, உலகம் முழுவதும் லித்தியத்திற்கு மிகப்பெரிய தேவை உள்ளது. உலகளாவிய தேவை காரணமாக இது வெள்ளை தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு டன் லித்தியத்தின் உலக விலை சுமார் ரூ.57.36 லட்சம்

மேலும் படிக்க | கிறுகிறுக்க வைக்கும் ஜம்மு காஷ்மீர் லித்தியம் புதையலின் மதிப்பு..! இத்தனை கோடிகளா?

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும் குறையும்

லித்தியத்திற்காக இந்தியா முழுவதுமாக வெளி நாடுகளையே சார்ந்துள்ளது. அங்கு இந்த உலோகத்தை விலை உயர்ந்த விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. இப்போது GSI தேகானாவைச் சுற்றி லித்தியத்தின் பெரும் இருப்பைக் கண்டறிந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள லித்தியம் படிவுகள் தேகானா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியின் மழைநீர் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2050-ம் ஆண்டுக்குள் லித்தியம் உலோகத்திற்கான உலகளாவிய தேவை 500 சதவீதம் அதிகரிக்கும் என உலக வங்கி அறிக்கை கூறும் நிலையில், இந்த லித்தியம் கண்டிபிடிப்புகள் இந்தியாவின் பொருளாதார நிலையை பெரிதும் உணர்த்தலாம். 

மேலும் படிக்க | இந்தியாவில் முதலில் லித்தியம்... இப்போது REE... ஏகபோக உரிமை கொண்ட சீனாவிற்கு அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News