ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2019, 03:02 PM IST
ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் title=

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைக்காத பட்சத்தில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. அதாவது ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் முன்ஜாமீன் மனு இன்று சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கினார். இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் தலா ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Trending News