பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் தாக்குதலுக்கு மேலும் ஒரு வீரர் பலி!

பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  4 நாட்களில் 11-ஆக உயர்ந்துள்ளது!

Last Updated : Jan 21, 2018, 02:37 PM IST
பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் தாக்குதலுக்கு மேலும் ஒரு வீரர் பலி! title=

பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  4 நாட்களில் 11-ஆக உயர்ந்துள்ளது!

காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்!

எனினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, ஜம்மு, கத்துவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த எல்லைப்படை தாக்குதலில் இதுவரை 4 ராணுவ வீரர்களும், 6 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு, பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் மெந்தார் செக்டார் பகுதியில் சந்தன்குமார் ராய் என்ற வீரர் படுகாயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்மூலம் பாகிஸ்தான் படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் 11-ஆக உயர்ந்துள்ளது!

Trending News