அக்டோபர் 28 தொடங்கி 3 கட்டங்களில் பீகார் தேர்தல்கள், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10

அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களில் பீகார் தேர்தல்கள் நடக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2020, 01:30 PM IST
  • பீகார் தேர்தல் கோவிட் -19-ல் நடக்கும் மிகப்பெரிய தேர்தலாக இருக்கும்.
  • அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களில் பீகார் தேர்தல்கள் நடக்கும்.
  • நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அக்டோபர் 28 தொடங்கி 3 கட்டங்களில் பீகார் தேர்தல்கள், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 title=

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான (Bihar Elections) தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் புதுதில்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி வருகிறது. தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், மாநிலத்தில் மாதிரி நடத்தை விதிமுறை அமல்படுத்தப்படும். COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், தலைவர்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரச்சாரம் மற்றும் வாக்களிப்புக்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பீகாரின் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தின் ஆட்சிக்காலம் அக்டோபர் 29, 2020 அன்று முடிவடைகிறது.

பீகார் தேர்தலுடன் ஒரு மக்களவை மற்றும் 64 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகள் தேர்தல்களை நடத்தியுள்ளன. எனினும், பீகார் தேர்தல்கள் தொற்றுநோய்களின் போது நடத்தப்படும் மிகப்பெரிய தேர்தல்களாக இருக்கக்கூடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (Sunil Arora) தெரிவித்தார். மாநிலத்தில் 72.9 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.

ALSO READ: Fit India 2020: உடல் நலனுடன் மன நலமும் முக்கியம் என்கிறார் பிரதமர் மோடி

பத்திரிக்கையாளர் சந்திப்பின் துவக்கத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “இன்று, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகார் தேர்தலை அறிவிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒப்பீட்டு புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால், இது COVID காலங்களில் நடக்கும் உலகின் மிகப்பெரிய தேர்தலாகும”என்று கூறினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:

- அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களில் பீகார் தேர்தல்கள் நடக்கும்.

-நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

- பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் நடைபெறும் முதல் தேர்தல்.

-பீகாரில் குடியேறிய 16.6 லட்சம் பேர் வாக்களிக்க முடியும்.

-வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

- கோவிட் -19 நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க முடியும்.

-வேட்பு மனுக்களை ஆன்லைனில் நிரப்பலாம்.

-சுமார் 46 லட்சம் முகக்கவசங்கள், 6 லட்சம் PPE கருவிகள், 6.7 லட்சம் யூனிட் ஃபேஸ்-ஷீல்டுகள், 23 லட்சம் (ஜோடி) கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு, 7.2 கோடி ஒற்றை பயன்பாட்டு கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

-பீகார் மாநிலத்தில் சட்டசபையின் காலம் 2020 நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பீகார் சட்டமன்றத்தில் 243 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 38 இடங்கள் SC மற்றும் இரண்டு ST-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

-பீகார் தேர்தல் கோவிட் -19-ல் நடக்கும் மிகப்பெரிய தேர்தலாக இருக்கும்.

-பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு 7L க்கும் மேற்பட்ட யூனிட் சேனிடைசர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ALSO READ: COVID -19 update: புதிய பாதிப்புகள் 86,508; மொத்த எண்ணிக்கை 57 லட்சம்

Trending News