சைக்கிளில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கூட்டுபலாத்காரம் செய்த கொடூரம்!

சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது..!

Last Updated : Jun 30, 2019, 01:34 PM IST
சைக்கிளில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கூட்டுபலாத்காரம் செய்த கொடூரம்! title=

சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது..!

பீகார் மாநிலம் சரனில் பள்ளியிலிருந்து சைக்கிள் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர். 

வெள்ளிக்கிழமை மதியம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சிறுமி வீட்டிற்கு செல்லும் போது அவளைத் தடுத்து, காரில் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது. பின்னர் பாதிக்கப்பட்டவர் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக சரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஹரிகிஷோர் ராய் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது சிறுமி தனது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தார். என்ன நடந்தது என்பதை தனது பெற்றோருக்கு தெரிவிக்க அந்த சிறுமி ஒரு வழிப்போக்கரின் தொலைபேசியின் மூலம் வீட்டிற்கு தொடர்புகொண்டுள்ளார். "பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து இழுத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் ஒரு i10 காரில் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் வெளியே விடப்பட்டார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கை பெல்டி காவல் நிலையம் கவனித்து வருவதாகவும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாகவும் எஸ்.பி ஹரிகிஷோர் ராய் தெரிவித்தார்.

வாகனத்தில் ஐந்து பேர் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, ஆனால் மூன்று பேர் கற்பழிப்பு செய்ததாக கூறப்படுகிறது. "பெயரிடப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் உள்ளனர், அவர்களைக் கைது செய்ய சோதனைகள் நடத்தப்படுகின்றன" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

 

Trending News