கிரேட்டர் நொய்டாவில் பிஜேபி தலைவர் ஷிவா குமார் சுட்டுக்கொலை

பி.ஜே.பி தலைவர் சிவா குமார் மற்றும் அவரது பாதுகாப்பாளர், பைக்கில் வந்த நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Last Updated : Nov 16, 2017, 07:05 PM IST
கிரேட்டர் நொய்டாவில் பிஜேபி தலைவர் ஷிவா குமார் சுட்டுக்கொலை title=

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பிஸ்ராக்கில் பிஜேபி தலைவர் ஷிவா குமார், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஷிவா குமாருக்கு சொந்தமான இரண்டு பள்ளிகள் ஹைபத்பூரில் உள்ளது. பள்ளிக்கு சென்றிருந்த ஷிவ் குமார் மற்றும் அவரது இரண்டு தனிப்பட்ட பாதுகாப்புப் பாதுகாவலர்களும் காரில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

இரண்டு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது காரை பின் தொடர்ந்தனர். எதிர்பாரதவிதமாக அடையாளம் தெரியாத நபர்கள், காரை நோக்கி சுட்டனர். அப்பொழுது குண்டு பாய்ந்த ஷிவா குமார் மற்றும் அவரது ஒரு பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். துப்பாக்கியால் சுட்டதால் நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்த மற்ற இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலைக்கு காரணம் யார் என உ.பி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Trending News