Budget 2023: எதிர்பார்க்கப்படும் 4 முக்கிய வரி சலுகைகள், அளிப்பாரா நிதி அமைச்சர்?

Budget 2023 Expectations: 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கம் சார்பில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி முழு பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்குவதற்காக சில வரி குறைப்புகளை நிதி அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2023, 10:37 AM IST
  • சம்பளம் பெறுபவர்கள் ஒரு நிதியாண்டில் தங்களின் வரிவிதிப்பு வருமானத்தை ரூ. 1.5 லட்சம் குறைக்க, பிரிவு 80C விதிவிலக்குகளைப் பயன்படுத்தலாம்.
  • 80Cக்கான வரம்பு நீண்ட காலமாக ரூ. 1,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய தேவையை பூர்த்தி செய்ய 80Cக்கான வரம்பு குறைந்தபட்சம் ரூ. 2,00,000 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: எதிர்பார்க்கப்படும் 4 முக்கிய வரி சலுகைகள், அளிப்பாரா நிதி அமைச்சர்?  title=

மத்திய பட்ஜெட் 2023: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து சாமானியர்கள் முதல் பல்வேறு தொழில்துறையினர் வரை அனைவருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் உயர்வு, வருமான வரி விலக்கு, பிரிவு 80C விலக்கு அதிகரிப்பு ஆகியவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் 2023-ன் எதிர்பார்ப்புகளில் அடங்கும். வருமான வரி அடுக்கு விகிதங்கள் மறுசீரமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. 

2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கம் சார்பில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி முழு பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்குவதற்காக சில வரி குறைப்புகளை நிதி அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட் 2023-ல் வரி செலுத்துவோர் மற்றும் வரிவகை நிபுணர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் உயர்வு

ஊதியம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, நிலையான விலக்கு என்பது மொத்த சம்பள வருவாயில் இருந்து அனுமதிக்கப்படும் விலக்கு ஆகும். இந்த விலக்கு தனிநபரின் வரிக்குட்பட்ட சம்பள வருமானத்தைக் குறைக்கிறது. மேலும் அவர்களது வரிச்சுமையையும் குறைக்கிறது. வருமான வரி தாக்கல் செய்யும் பெரும்பாலான வரி செலுத்துவோர் பயன்படுத்தும் பழைய வரிக் கட்டமைப்பின் கீழ், சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் ₹50,000 பிடித்தம் செய்ய உரிமை உண்டு.

சில காலமாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் நிலையாக இருக்கும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பு வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்று வரி நிபுணர்கள் கருதுகிறார்கள். 

80C விலக்கு அதிகரிக்க கோரிக்கை 

சம்பளம் பெறுபவர்கள் ஒரு நிதியாண்டில் தங்களின் வரிவிதிப்பு வருமானத்தை ரூ. 1.5 லட்சம் குறைக்க, பிரிவு 80C விதிவிலக்குகளைப் பயன்படுத்தலாம். 80Cக்கான வரம்பு நீண்ட காலமாக ரூ. 1,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறி வரும் பொருளாதார சூழலில், இன்றைய தேவையை பூர்த்தி செய்ய 80Cக்கான வரம்பு குறைந்தபட்சம் ரூ. 2,00,000 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 பட்ஜெட்டில் விலக்கு உச்சவரம்பு ரூ2.5 லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திற்கான 80டி வரம்பையும் ரூ.50,000 முதல் ரூ75,000, ரூ. 1,00,000 வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

மேலும் படிக்க | Budget 2023: டாப் 5 எதிர்பார்ப்புகள், நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்? 

வரி அடுக்கு விகிதங்களை மறுசீரமைத்தல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது புதிய, விருப்பமான (ஆப்ஷனல்) வரி விதிப்பை அறிவித்தார். இருப்பினும், புதிய வரி விதிப்பு முறையானது இன்றுவரை மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.  

மிகச்சிறிய தனிநபர் வருமான வரி பிராக்கட் 5% ஆகும். அதே சமயம் அதிக கட்டணம் மற்றும் செஸ் உட்பட அதிக வரி பிராக்கட் 42.74 சதவீதம் ஆகும். அதிகபட்ச ஸ்லாப் விகிதத்தை 25% ஆகக் குறைக்க, அடிப்படை விலக்கு அளவை ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்துவதும், அத்துடன் 2023 பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களைக் குறைப்பதும் அவசியம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

வருமான வரியில், குறைந்த வரிவிகிதங்கள் மூலமாகவோ, அல்லது வரி அடுக்குகளை மறுசீரமைப்பதன் மூலமாகவோ 2023 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வரி விலக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள் பல்துறை நிபுணர்கள். பல்வேறு வரிகளில் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் அவற்றை மேலும் முற்போக்கானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும். 

வொர்க் ஃப்ரம் ஹோம் அலவன்ஸ் 

வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH), வீட்டிலேயே அலுவலக அமைப்பை உருவாக்கும் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு சில நிவாரணங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு இந்த போக்கு அதிகமாகியுள்ளதால், இதில் சலுகைகளுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.   

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த பங்குகளின் முதலீடு செய்தால் இலாபம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News