புல்தானா கற்பழிப்பு வழக்கு: மேலும் நான்கு பேர் கைது

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளி ஒரு மாணவியை  பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Nov 5, 2016, 11:07 AM IST
புல்தானா கற்பழிப்பு வழக்கு: மேலும் நான்கு பேர் கைது title=

மும்பை: மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளி ஒரு மாணவியை  பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மராட்டியத்தில் பள்ளியில் மாணவிகள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தீபாவளியையொட்டி பள்ளிக்கூடத்தில் தனக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பள்ளி ஊழியர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் என மேலும் 4 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மராட்டியத்தில் இதுபோன்று சுமார் 1,000 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவ்வகை பள்ளிகள் மராட்டிய அரசு அல்லது அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இப்பள்ளிகளில் சுமார் 4.45 லட்ச மாணவர்கள் படித்து வருகிறார்கள், இவர்களில் 1.99 லட்சம் பேர் மாணவிகள்.

Trending News