முத்தலாக் தடுப்பு மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம்..!

முத்தலாக் தடுப்பு சட்டத்திருத்த மசோதாமீது இன்று மக்களவையில் விவாதம்நடைபெற உள்ளது.

Last Updated : Jul 25, 2019, 07:31 AM IST
முத்தலாக் தடுப்பு மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம்..! title=

முத்தலாக் தடுப்பு சட்டத்திருத்த மசோதாமீது இன்று மக்களவையில் விவாதம்நடைபெற உள்ளது.

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆனால், மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் 
கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவைக்கு வரும்படி கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் மக்களவையில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையிலும் பாஜக எம்பிக்கள் இன்று முழு அளவில் பங்கேற்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் இதனை நிறைவேற்ற சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 

Trending News