பாரத் ரத்னா விருதை கோட்சே-க்கு தரலாமே... -மனிஷ் திவாரி!

வரவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையில் பாரத் ரத்னாவுக்கு வீர் சாவர்க்கர் பெயரை முன்வைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ளார்.

Last Updated : Oct 17, 2019, 02:09 PM IST
  • காந்தியைக் கொலை செய்ததாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்
பாரத் ரத்னா விருதை கோட்சே-க்கு தரலாமே... -மனிஷ் திவாரி! title=

வரவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையில் பாரத் ரத்னாவுக்கு வீர் சாவர்க்கர் பெயரை முன்வைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ளார்.

மேலும் கட்சி உடனடியாக நாதுராம் கோட்சேவுக்கும், நாட்டின் மிக உயர்ந்த விருதினை அளித்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

"காந்தியை படுகொலை செய்ய சதி செய்ததாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது, அதேசமயம் நாதுராம் கோட்சே காந்தியின் படுகொலையை மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசாங்கம் பாரத ரத்னாவை சாவர்க்கருக்கு பதிலாக கோட்சேவுக்கு வழங்க வேண்டும்" என திவாரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக புதன்கிழமை, காங்கிரஸ் தலைவர் ராஷித் ஆல்வியும் சாவர்க்கருக்கு பாரத ரத்னாவை வழங்க முன்வந்ததற்காக பாஜக-வை கடுமையாக சாடினார், மேலும் இப்பட்டியலில் நாதுராம் கோட்சேவின் பெயர் அடுத்த வரிசையில் இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

"சாவர்க்கரின் வரலாறு அனைவருக்கும் தெரியும். காந்தியைக் கொலை செய்ததாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்று, இந்த அரசு சாவர்க்கருக்கு பாரத் ரத்னாவை கொடுப்பதாகக் கூறுகிறது, இவ்வாறு சென்றால் இந்த வரிசையில் அடுத்து கோட்சே இருக்கக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்" என ராஷித் ஆல்வி தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த அறிக்கையில், பாரத் ரத்னா விருதுகள் குறித்த ஒரு பக்கம் இருந்தது, அதில் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுக்கு மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே மற்றும் வீர் சாவர்க்கர் ஆகியோரின் பெயர்களை கட்சி முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News