பங்குச் சந்தையின் கறுப்பு நாள்..சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிவு...!

இன்று காலையிலேயே சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களில் சுமாராக 3,090 புள்ளிகள் சரிந்தது.

Last Updated : Mar 13, 2020, 10:18 AM IST
பங்குச் சந்தையின் கறுப்பு நாள்..சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிவு...! title=

வியாழக்கிழமை ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையும் சந்தையில் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்ததை அடுத்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீட்க முடியவில்லை. சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களில் சுமாராக 3,000 புள்ளிகள் சரிந்து 29,687 புள்ளிகளைத் தொட்டது. அதே போல நிஃப்டியும் 989 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 9,059 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வியாழக்கிழமை, அமெரிக்க பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டது. பெஞ்ச்மார்க் டோவ் ஜோன்ஸ் 2,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, சமிக்ஞையை எடுத்துக் கொண்டால், ஆசிய சந்தைகளும் கீழ்நோக்கிய போக்கைக் கண்டன. கொரோனா வைரஸ் குறித்த பயம் அமெரிக்க சந்தையில் தெளிவாகத் தெரியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே ஒரு நாளில், அமெரிக்க சந்தை 10 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை, அதிக விற்பனை அழுத்தங்களுக்கு மத்தியில், சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக முடிவடைந்தது, நிஃப்டியின் நிலையும் இதேபோல் இருந்தது. இங்கே இது 868 புள்ளிகள் குறைந்து 9,590 ஆக இருந்தது.

கொரோனாவின் அழிவு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது, இதன் காரணமாக விற்பனை அழுத்தம் உள்ளது. முந்தைய அமர்வில் இருந்து டாலருக்கு எதிராக ரூபாய் 61 பைசா சரிந்து ஒரு டாலருக்கு 74.25 ரூபாயாக இருந்தது. முந்தைய அமர்வில் ரூபாய் வலுப்பெற்று ஒரு டாலருக்கு 73.64 ஆக இருந்தது.

Trending News