டெல்லியில் கடும் பனி: 52 ரயில் தாமதம்!!

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது

Last Updated : Dec 24, 2016, 10:37 AM IST
டெல்லியில் கடும் பனி: 52 ரயில் தாமதம்!! title=

புதுடெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 52 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 5 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் புறப்பட தாமதமானது. 

டெல்லியில் இன்று அதிகாலை 7.8 டிகிரியாக இருந்ததால் குளிர் தாங்க முடியாதபடி இருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கூட அடர்த்தியான பனி மூட்டம் காணப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் குளிர் மிக காணப்படுகிறது. நேற்று அங்கு தட்பவெட்ப நிலை ஜீரோ டிகிரியாக குறைந்தது.

இந்நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும். இன்னும் 4-5 நாட்கள் பனி மூட்டம் அளவு அதிகமாக காணப்படும் என்று தகவல் வந்துள்ளது.

Trending News