ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் கைது!!

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் கைது! 

Last Updated : Jun 11, 2018, 09:59 AM IST
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் கைது!! title=

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் கைது! 

டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ப்ரீடம் 251 என்ற பெயரில் உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது. இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்துள்ளனர். 

இதையடுத்து, பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பதிவுசெயத்தால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது. இதன் பின்னர் 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

இதை தொடர்ந்து ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு செல்போன் எண்ணிலிருந்து ஒரே ஒரு ஸ்மார்ட் போனுக்கு மட்டுமே முன் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவில்லை. பணம் பெற்றுக்கொள்வது பற்றிய விவரம் வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்ட இமெயில் மூலம் 48 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எவ்வித மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தனது செல்போன்களை அமோசான் மூலம் விற்பனை செய்ய தொடங்கியது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்ததை அடுத்து நிறுவனத்தின் பின்புலம், நிதி ஆதாரம் குறித்து அமலாக்கத்தைதுறை விசாரணையும் நடத்தி வந்தது.

இதையடுத்து, நேற்று பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் மோகித் கோயல் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!!

 

Trending News