ஒடிஷா ரயில் விபத்து... 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது CBI!

ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார்  290 பேர் உயிரிழந்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2023, 10:36 AM IST
  • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்.
  • ரயில் விபத்தில் சிக்கி சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
  • இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304 மற்றும் 201 மற்றும் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153 ஆகியவற்றின் கீழ் கைது.
ஒடிஷா ரயில் விபத்து... 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது CBI! title=

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனிடையே,  ஒடிசா ரயில் கோர விபத்து தொடர்பான விசாரணையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக,  3 ரயில்வே ஊழியர்களை விசாரணைக்காக  மேலும் 5 நாள் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. 

முன்னதாக, விசாரணைக்காக மூவரையும் ஏழு நாட்கள் காவலில் வைக்க சிபிஐ கோரியிருந்தது, ஆனால் நீதிமன்றம் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்தது. முன்னதாக, வெள்ளிக்கிழமை, முதன்மையான மத்திய புலனாய்வு முகமை மூத்த பிரிவு பொறியாளர் அருண் குமார் மொஹந்தா, பிரிவு பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்புகுமார் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304 மற்றும் 201 மற்றும் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153 ஆகியவற்றின் கீழ் கைது செய்தது.

ஜூன் 2-ம் தேதி நடந்த மூன்று ரயில் விபத்தில், சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை சிக்கின. இந்த விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, ஜூன் 6ஆம் தேதி அந்த நிறுவனம் விசாரணையை மேற்கொண்டது.

"இந்த விபத்து தொடர்பாக ஜூன் 3 தேதியிட்ட GRPS வழக்கு எண்.64 இல், மாவட்ட கட்டாக் (ஒடிசா) பாலசோர் GRPS நிலையத்தைல் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்று சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டார். தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பதவியேற்க அனில் குமார் மிஸ்ராவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு அனுமதி வழங்கியது. "பாலாசோர் ரயில் விபத்துக்குப் பிறகு தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஒடிஷா ரயில் விபத்து... ‘காணாமல் போன’ ஜூனியர் இன்ஜினியர் வீட்டுக்கு சீல் வைத்த CBI..!

முன்னதாக, எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த ரயில் விபத்து ஏற்பட காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். 

யில்வே சிக்னலைக் கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பயன்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பு அமைப்பு. ரயில்களின் பாதுகாப்பிற்காக சிக்னல்கள் மற்றும் சுவிட்சுகளுக்கு இடையிலான ஆபரேடிங் சிஸ்டம் அமைப்பை இது, கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம், ரயில்வே தடங்களில் ஓடும் ரயில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இதன் மூலம், ரெயில் யார்டின் பணிகள்  கட்டுப்படுத்தப்பட்டு ரயில் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டு, ரயில் பாதுகாப்பாக ரயில் தடத்தை கடப்பதை உறுதி செய்கிறது. 

மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News