முதலிரவில் மனைவியை பிளைடால் அறுத்த கொடூர கணவன்!

ஆந்திராவில் முதலிரிவில் பெண்னை பிளைடால் அறுத்து சித்தரவதை செய்த காம கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். 

Last Updated : Dec 4, 2017, 10:39 AM IST
முதலிரவில் மனைவியை பிளைடால் அறுத்த கொடூர கணவன்! title=

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.பி.எஸ். படித்துள்ளவர் சைலஜா. இவருக்கும் வி. கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிய கூடிய மேதரங்கா பள்ளியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு நேற்று காலை காணிபாக்கம் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பெண் வீட்டில் முதலிரவுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். முதலிரவுக்காக ராஜேஷ் உள்ள அறைக்கு சென்ற சைலஜா சில மணி நேரத்தில் அறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, சைலஜாவின் வாயில் துணியை வைத்து மூடி பிறப்புறுப்பு, மார்பகம் என உடலில் பல்வேறு இடங்களில் பிளைடால் ராஜேஷ் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சைலஜா அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார். பெற்றோர்கள் நடந்த விவரம் தெரியாமல் சமாதானப்படுத்திய நிலையில் திடிரென மயங்கி விழுந்தார். 

இதையடுத்து, உடனடியாக சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடூர மாப்பிள்ளையை உறவினர்கள் அடித்து ஜி.டி. நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுமார் ரூ 60 லட்சம் செலவு செய்து திருமணம் செய்த நிலையில் தனது மகளை வாழ்கையை சீர்அழித்த ராஜேஷ் மீது நடுவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சைலஜாவிற்கு மேல் சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியார் மருத்தவ மனைக்கு கொண்டு சென்றனர். 

ராஜேஷ் அனைவரிடம் நல்ல முறையில் பழகி வந்த நிலையில் திடிரென எதற்காக இதுபோன்று சைக்கோ போன்று செய்தார் போன்ற காரணங்கள் குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Trending News