ஜம்மு காஷ்மீர்: ராணுவத்தினர் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

Last Updated : Jun 23, 2016, 05:06 PM IST
ஜம்மு காஷ்மீர்: ராணுவத்தினர் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர் title=

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 

வடக்கு காஷ்மீரின் குபுவாரா மாவட்டம் லோலாப் பகுதியில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தோப்வான் காட்டு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநில போலிஸாரும் இராணுவத்துடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டது. பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்து உள்ளது.

Trending News