குப்வாரா என்கௌண்டர்: 2 சிஆர்பிஎப், 2 ஜம்மு போலீசார் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாராவில், தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும், போலீசார் 2 பேரும் வீரமரணமடைந்தனர். 

Last Updated : Mar 3, 2019, 10:40 AM IST
குப்வாரா என்கௌண்டர்: 2 சிஆர்பிஎப், 2 ஜம்மு போலீசார் வீரமரணம்! title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாராவில், தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும், போலீசார் 2 பேரும் வீரமரணமடைந்தனர். 

இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள பட்காம், ஹண்ட்வாரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இதையடுத்து அப்பகுதியை போலீசாருடன் இணைந்து சுற்றிவளைத்த  பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கிய இந்த பணியின் போது, ஒரு வீட்டில் பதுங்கிருந்தபடி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 

இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும், போலீசார் 2 பேரும் வீரமரணமடைந்தனர். மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் குண்டடிபட்டு உயிரிழந்தார்.

Trending News