LIVE 6வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

நாடு இன்று 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆறாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 15, 2019, 11:23 AM IST
LIVE 6வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் title=

புதுடெல்லி: நாடு இன்று 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆறாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றி வருகிறார். முன்னதாக, ராஜ்காட் வந்த அவர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) காலை ட்வீட் செய்து சுதந்திர தினத்தன்று அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்து கூறினார். பிரதமர் மோடி ட்விட்டரில் எழுதினார், 'சுதந்திர தினத்தன்று அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்!

 

 

 

செங்கோட்டையில் நடைபெற்று வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மற்ற தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து கொண்டுள்ளனர். இன்று, செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து, பிரதமர் மோடி தனது உரையில் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பேசி வருகிறார். 

Trending News