பெண் குழந்தை வேண்டி, தனது ஆண் குழந்தையை கொன்ற தாய்!

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்மனி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறக்காத விரக்தியில் தன்னுடைய ஆண் குழந்தையை கொன்றுள்ளார்!

Last Updated : Jun 25, 2018, 04:38 PM IST
பெண் குழந்தை வேண்டி, தனது ஆண் குழந்தையை கொன்ற தாய்! title=

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்மனி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறக்காத விரக்தியில் தன்னுடைய ஆண் குழந்தையை கொன்றுள்ளார்!

மகாராஷ்டிராவின் பிட்கின் பகுதியே சேர்ந்தவர் வேதிக்கா எராண்டே. இவர் பெண் குழந்தை வேண்டி பல நாட்களாக காத்துள்ளார், ஆனால் இறுதி பிரசவத்தில் இவருக்கு ஆண் குழந்தையே பிறந்துள்ளது. 

இதனால் கடந்த 10 மாதங்களா விரக்கிதியில் வாழ்ந்து வந்த இவர், தற்போது தனது 10 மாத குழந்தை ப்ரேம் பரமேஷ்வரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க தானே காவல்நிலையம் சென்று தனது குழந்தையை இரண்டு நாட்களாக காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை துவங்கி காவல்துறையினர், புகார் அளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே இறந்த குழந்தையின் உடலை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டனர். இதனால் குழம்பிய காவல்துறையினர் வேதிகாவிடம் குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது அவர் நடந்தவற்று கூறி குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட வேதிக்காவிற்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருப்பதால், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளார். ஆனால் இரண்டாவது பிரசவத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறக்கவே பிறந்த குழந்தையினை கொலை செய்துள்ளார்.

IPC பிரிவு 302-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட வேதிகாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!

Trending News