கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!

அயோத்தியில் கத்தி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...!

Last Updated : Jun 25, 2020, 06:26 PM IST
கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..! title=

அயோத்தியில் கத்தி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...!

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அயோத்தி கோசைகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் பதுங்கியிருந்து அவளை கத்தி முனையில் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போஸ்கோ சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கோசைகஞ்ச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஷெர்வாகட் கிராமத்தைச் சேர்ந்தது. அங்கு சிறுமி மலம் கழிக்கச் சென்றார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் சச்சினின் மகன் ஜஸ்ராஜ் பின்னால் இருந்து வந்து மைனரை கழிப்பறைக்குள் இழுத்து சென்று துன்புறுத்தினார்.

READ | பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!

பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை விட்டு வெளியேறினார். பின்னர், அவள் எப்படியோ வீட்டிற்கு வந்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தாள். இந்த விஷயம் குறித்த தகவல் கிடைத்ததும், உறவினர்கள் காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Trending News