ராஜினாமா செய்த சிந்தியா-வை கட்சியை விட்டு நீக்கியது காங்கிரஸ்...

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமாவை சமர்ப்பித்த சில நிமிடங்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார்.

Last Updated : Mar 10, 2020, 01:04 PM IST
ராஜினாமா செய்த சிந்தியா-வை கட்சியை விட்டு நீக்கியது காங்கிரஸ்... title=

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமாவை சமர்ப்பித்த சில நிமிடங்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார்.

"கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு உடனடியாக அமல்படுத்தும் விதமாக இந்திய தேசிய காங்கிரசிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியாவை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உடன் சிந்தியா டெல்லியில் சந்திப்பு நடத்திய நிலையில், உடனடியாக வேணுகோபால் சோனியா காந்தியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று, சிந்தியாவுக்கு விசுவாசமான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு ஒரு பட்டய விமானத்தை எடுத்துச் சென்று, மத்திய பிரதேசத்தில் உள்ள கமல்நாத் அரசாங்கத்தை ஆபத்தில் ஆழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து இன்று, காங்கிரஸ் தலைமையுடன் பல மாதங்களாக கருத்து வேறுபாட்டில் இருக்கும் சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். சந்திப்பை அடுத்து விரைவிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார்.

"கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினராக இருந்த நான், இப்போது நான் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய தேசிய காங்கிரசின் முதன்மை உறுப்பினர் இடத்தில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன், உங்களுக்குத் தெரியும், இது ஒரு பாதை இது கடந்த ஆண்டு தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது," என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனது நோக்கம் மற்றும் விருப்பம் ஆரம்பத்தில் இருந்தே எப்போதும் இருந்தபடியே இருக்கின்றன, எனது மாநில மற்றும் நாட்டின் மக்களுக்கு சேவை செய்வது, இந்த கட்சியுடன் இனி இதைச் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன், என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News