Video: குருத்வாரா சாஹிப் தாழ்வாரத்தை தொடங்கி வைத்தார் மோடி...

கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்து 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்களின் குருத்வாரா தர்பார் சாஹிப் பயணத்திற்கு வழிவகுத்தார்.

Last Updated : Nov 9, 2019, 04:12 PM IST
Video: குருத்வாரா சாஹிப் தாழ்வாரத்தை தொடங்கி வைத்தார் மோடி... title=

கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்து 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்களின் குருத்வாரா தர்பார் சாஹிப் பயணத்திற்கு வழிவகுத்தார்.

திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாடல் மற்றும் நடிகரும் குர்தாஸ்பூர் சட்டமன்ற உறுப்பினருமான சன்னி தியோல் ஆகியோரும் இடம்பெற்றனர்.

குருத்வாரா தர்பார் சாஹிப் தாழ்வாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி கட்டப்பட்டுள்ளது, அங்கு யாத்ரீகர்கள் புதிதாக கட்டப்பட்ட நடைபாதையில் பயணிக்க அனுமதி கிடைக்கும். பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தை பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்போடு இணைக்கும் கர்தார்பூர் தாழ்வாரத்தை திறக்கும் இந்த விழா, வரும்  12-ஆம் தேதி சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சனியன்று பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் இறங்கினார். அவரை முதல்வர் அமரீந்தர் சிங் வரவேற்றார். தேரா பாபா நானக்கிற்குச் செல்வதற்கு முன்பு, சுல்தான்பூர் லோதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெர் சாஹிப் குருத்வாராவில் மரியாதை செலுத்தினார்.

திறப்பு விழாவிற்கு முன்னதாக ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) ஏற்பாடு செய்திருந்த விழாவில், இந்தியர்களின் உணர்வுகளை மதித்தமைக்காக தனது பாகிஸ்தான் பிரதிநிதி இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, கர்த்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "குருத்வாரா தர்பார் சாஹிப் வருகை தற்போது எளிதாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்

தலைப்பாகை அணிந்த மேடையில் தோன்றிய பிரதமர் மோடி தனது உரையில், தாழ்வாரம் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவை செய்யும் என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல் முத்திரைகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

Trending News