மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் தேர்வு!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2018, 12:04 PM IST
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு! title=

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் தேர்வு!!

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.  அதன்பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேற்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் வெற்றிபெற்றுள்ளார். 

 

Trending News