டெல்லியில் கடும் பனி: 52 ரயில் தாமதம்

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 28, 2016, 10:47 AM IST
டெல்லியில் கடும் பனி: 52 ரயில் தாமதம் title=

புதுடெல்லி: வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 52 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 10 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

வடக்கு ரயில்வே அதிகாரி படி, புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அட்டவணை பின்னால் 24 மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன, சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 23 மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன மற்றும் சுவதன்திரதா சேனானி எக்ஸ்பிரஸ் 20 மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன.

அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் விமானங்கள் இன்று டெல்லியில் புறப்பட தாமதமானது.

Trending News