தனி குழுவாக ரயிலில் பயணிக்க வேண்டுமா? IRCTC-ன் புதிய அறிவிப்பு

தனியார் நிகழ்ச்சிகள், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா, மத விழாக்கள் போன்றவற்றிக்காக தனி ரயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் மூலமாக புக் செய்யலாம் என IRCTC அறிவித்துள்ளது.

Last Updated : Feb 18, 2018, 09:04 AM IST
தனி குழுவாக ரயிலில் பயணிக்க வேண்டுமா? IRCTC-ன் புதிய அறிவிப்பு title=

தனியார் நிகழ்ச்சிகள், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா, மத விழாக்கள் போன்றவற்றிக்காக தனி ரயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் மூலமாக புக் செய்யலாம் என IRCTC அறிவித்துள்ளது.

தனி ரயில்கள், பெட்டிகள் அல்லது சொகுசு வசதிகளை பதிவு செய்ய எழுத்துப்பூர்வ கோரிக்கை கடிதம் அளிக்க வேண்டும். ரயில்வே குறிப்பிடும் டெபாசிட் தொகையை செலுத்திய பின்பு டிக்கெட் வழங்கப்படும். 

இதுகுறித்து IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சுற்றுலாவிற்கு செல்லும்போது தனி ரயில்கள், பெட்டிகளை பதிவு செய்வார்கள். டிராவல் ஏஜென்சிகளின் மூலம் இந்த புக்கிங் நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது இந்த புக்கிங் ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்ய முடியும். இதற்கு கூடுதலாக 5% புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் சேவை வரியாக 30% விதிக்கப்படும்.

இதற்கு பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ. 50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News