J&K எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் பலி!

Last Updated : Feb 9, 2020, 11:11 AM IST
J&K எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலி   title=

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 9) பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியதால் ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், பாக்கிஸ்தானிய இராணுவம் முன்னோக்கி கிராமங்கள் மீது சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது என அவர் கூறினார்.  

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு (LoC) அருகே நேற்று மதியம் 3.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அவர்களுக்கு, ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து வெளியிட்ட கடைசி அறிக்கையில், இந்திய இராணுவம் ஒரு திறமையான பதிலடி மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Trending News