பெரிய மீசையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி!

மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் நீண்ட மீசை வைத்திருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 09:18 PM IST
  • காவலர் பணியில் பணியாற்றுபவர்களுக்கென்று பிரத்தேயகமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
  • ராகேஷ் ராணா காவலர்களுக்கே உரித்தான தோற்றத்தில் அல்லாமல் சற்று மாறுபட்டு மாறுபட்ட தோற்றத்தில் இருந்து இருக்கிறார்.
பெரிய மீசையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! title=

பொதுவாக ஒருவரின் தோற்றத்தை வைத்தே இவர் காவலர் என்பதை கணித்துவிடலாம்.  காவலர் பணியில் பணியாற்றுபவர்களுக்கென்று பிரத்தேயகமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.  அதன்படி பெரிய மீசை வளர்க்கவும், அளவுக்கதிகமாக தலைமுடிகளை வளர்த்து கொள்ளவும், வித விதமான சிகை அலங்காரங்களை செய்து கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  இந்த விதிகளை பின்பற்றாததால் காவல் துறையை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | Ice dance: வெண்பனி மலையில் இந்திய ராணுவத்தினரின் டான்ஸ்! வீடியோ வைரல்

மத்திய பிரதேச காவல் துறையில் சிறப்பு பொது இயக்குனருக்கான வாகன ஓட்டுனராக பணியாற்றி வருபவர் ராகேஷ் ராணா.  இவர் காவலர்களுக்கே உரித்தான தோற்றத்தில் அல்லாமல் சற்று மாறுபட்டு நீண்ட மீசையையும், கழுத்து வரை தலைமுடியையும் வளர்த்து இருக்கிறார், காவலர்களுக்கான விதிமுறைகளின் படி காவலர்கள் யாரும் இவ்வாறு நீண்ட மீசையினையும், தலைமுடியையும் வைத்திருக்க கூடாது.  இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள்  ராகேஷ் ராணாவின் நீண்ட மீசையை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

polic

இதேபோல் பலமுறை உயர் அதிகாரிகள் அவரிடம் வலியுறுத்தியும், அவர் உயர் அதிகாரிகளின் சொல்லுக்கு செவி சாய்க்கவில்லை.  இதனால் இவர் விதிமுறைகளை மீறியதாக கூறி  ஐ.ஜி. பிரசாந்த் இவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.  இதுகுறித்து அதிகாரி கூறுகையில், "ராணா காவலர்களுக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் அதிகமான முடியை வளர்த்துக்கொண்டும், நீண்ட மீசையை வைத்துக்கொண்டும் வித்தியாசமாக இருந்தார்.  இவ்வாறு காவலர்கள் இருக்கக்கூடாது, இதனை சரி செய்யுங்கள் என்று பலமுறை அவரிடம் அறிவுறுத்தியும், அவர் உயர் அதிகாரிகளின் பேச்சை ஒருபோதும் மதிக்கவே இல்லை.  அதனால் நாங்கள் அவர்மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்று கூறினார்.

polic

இதுகுறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராணா கூறுகையில், "நான் ஒருபோதும் என்னுடைய மீசையை எடுக்க போவதில்லை, என்னுடைய தோற்றத்தை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன், இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ALSO READ | ரூ.7 லட்சம் செலவழித்து நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய சகோதரர்கள் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News