சுதந்திர தின விழா! 1,800 சிறப்பு விருந்தினர்கள்... வீடு தோறும் மூவர்ணக்கொடி... !

நாடு முழுவதும் நாளை முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2023, 02:25 PM IST
  • இந்தியக் கொடி சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது.
  • செங்கோட்டை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட 'சிறப்பு விருந்தினர்களில்' கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர்.
  • வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தின விழா!  1,800 சிறப்பு விருந்தினர்கள்... வீடு தோறும் மூவர்ணக்கொடி... ! title=

புதுடெல்லி: டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்த ஆண்டு நடைபெறும் பெரிய சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வழக்கமான உரையை ஆற்றுகிறார். இதற்காக அரசாங்கத்தின் தரப்பில் இருந்து சுமார் 1,800 ‘சிறப்பு விருந்தினர்கள்’ இடம்பெறுவார்கள். முன்னதாக, நேற்று, நாடு முழுவதும் நாளை முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செங்கோட்டை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட 'சிறப்பு விருந்தினர்களில்' துடிப்பான கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதம மந்திரி விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பிரதம மந்திரி தொழிலாளர்கள் நல திட்ட பயனாளிகள் விஸ்டா திட்டம், காதி தொழிலாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடுதோறும் குடி தண்ணீர் திட்டம் பயனாளிகள்  மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் அடங்குவர். .

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செல்ஃபி பாயிண்டுகளும் தேசிய தலைநகர் முழுவதும் 12 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. "கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-20 முதல் MyGov போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டி நடத்தப்படும். மக்கள் 12 நிறுவல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செல்ஃபி எடுத்து அவற்றை MyGov தளத்தில் பதிவேற்றம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். போட்டியில் ஒவ்வொரு பாயிண்டில் இருந்தும் பன்னிரண்டு வெற்றியாளர்கள், ஆன்லைன் செல்ஃபி போட்டியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தலா ₹ 10,000 பரிசுத் தொகை வழங்கப்படும்" என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்.. பம்பர் சம்பளம் உயர்வு

இந்த ஆண்டு செங்கோட்டையில் இந்திய ராணுவம் ஒருங்கிணைப்பு சேவையாக உள்ளது. மேஜர் நிகிதா நாயர் மற்றும் மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் பிரதமருக்கு தேசியக் கொடியை ஏற்றிவைக்க உதவுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், லைன் ஆஸ்டர்ன் ஃபார்மேஷனில் உள்ள இந்திய விமானப்படையின் மார்க்-III துருவ் என்ற இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தில் மலர் இதழ்களை பொழியும். 

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடக கணக்கில் தனது பிரொபைல் படத்தை 'மூவர்ணக்கொடி' (இந்தியக் கொடி) என்று மாற்றினார். மேலும் குடிமக்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளின் பிரொபைல் படத்தை (டிபி) மாற்ற வேண்டும் என்றும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "#HarGharTiranga இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடக கணக்குகளின் டிபியை மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவை வழங்குவோம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை, இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தினார்.

இந்தியக் கொடி சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியுடன் தங்களுடைய புகைப்படங்களை 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மக்களை வலியுறுத்தினார். "மூவர்ணக் கொடி சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வை அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க மூவர்ணக்கொடி நம்மை ஊக்குவிக்கிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission அடி தூள்: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட்.. இதுவும் அதிகரிக்குமாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News