மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா?

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 13, 2019, 04:49 PM IST
மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா? title=

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தியை ரெய்பிரேலி அல்லது அமோதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் பிரியங்கா மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாகவும் தெரிகிறது. எனினும் இறுதி அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வசம் இருந்தே வெளியாகும் எனவும் நம்பிக்கைகுறிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் கட்சி தொண்டர்களுடன் பிரியங்கா கலந்துரையாடல் நடத்திய போது, ரெய்பிரேலி அல்லது அமோதி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டு வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்ததாகவும், அதற்கு ஏன் வாரணாசி தொகுதியில் போட்டியிட கூடாதா? என கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாரணாசி தொகிதியில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கேஜிரிவால் தோற்கடித்து 3,71,784  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது 2019-ஆம் தேர்தலில் பிரதமர் மோடி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை எதிர்கொள்ள இருப்பது குறிப்படத்தக்கது.

Trending News