நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடும்பவனம் கார்த்திக் இரவு 10 மணிக்கு பிறகு 5 நிமிடங்கள் கூடிதலாக பிரச்சாரம் செய்ததால் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது பேச்சை நிறுத்துமாறு கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மத்திய பாஜக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதனமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
இந்திய மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா சதி செய்யும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் கேலி செய்து அசிங்கமாக பேசுகிறார் திமுக வேட்பாளர் நமக்கு அவர் தேவையா? ஐடி ரைட் வரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்களுக்கு ஏழை தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி கவலை இல்லை என்றார் நடிகை விந்தியா.
கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதே 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.