ஆர்.பி.ஐ கவர்னர்: இறுதிப்பட்டியலில் நான்கு பேர்

Last Updated : Jun 27, 2016, 02:23 PM IST
ஆர்.பி.ஐ கவர்னர்: இறுதிப்பட்டியலில் நான்கு பேர் title=

ரகுராம் ராஜனுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் பெயருக்கு நான்கு பேரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். புது பணக்கொள்கை வகுப்பதற்கான குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கவர்னர் பட்டியலில் ரிசர்வ் வங்கியின் 3 மூத்த அதிகாரிகள், மற்றும் பொதுத்துறை வங்கியின் தலைவர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உர்ஜித் படேல், முன்னாள் துணை கவர்னர்கள் ராகேஷ் மோகன், சுபிர் கோகன் ஆகியோரும், ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.

புது பணக்கொள்கை வகுக்க புதுக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் ரகுராம் ராஜன் இணைவார் எனவும், இந்த குழு உறுப்பினர்கள், புது கவர்னர் நியமனத்திற்கு முன் நடைபெறும் எனவும் தகவல்கள் கிடைத்தன.

Trending News