குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்....

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்...... 

Last Updated : Jan 25, 2019, 10:41 AM IST
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.... title=

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்...... 

நாட்டின் 70 ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

ரஜோவ்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதி மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சம்பா பகுகுடியரசு தினதியில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பை முன்னெடுத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ரஜோவ்ரி மாவட்டத்தில், ஆண், பெண் போலீசாரும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், முழு சீருடை அணிந்து, குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில், ஈடுபட்டனர். 

இந்நிலையில், குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. 

 

Trending News