சுவிஸ் நாட்டு தம்பதியர் மீது ஆகராவில் தாக்குதல்!!

Last Updated : Oct 26, 2017, 01:01 PM IST
சுவிஸ் நாட்டு தம்பதியர் மீது ஆகராவில் தாக்குதல்!! title=

லக்னோ ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசிடம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கேட்டு உள்ளது. 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த தம்பதியினர், உ.பி., மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்தனர். ஊரை சுற்றி பார்த்த இவர்கள் பதேபுர்சிக்ரி என்ற இடத்தில் மர்ம கும்பல் தாக்கியது. 

தற்போது சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசிடம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

Trending News