மரணம் குறித்து தெரிந்ததும் இளம் மருத்துவர் செய்த செயல்..! கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி கதை!

Interesting Story In Tamil: தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 11, 2023, 02:26 PM IST
  • மனைவியின் விசாவுக்காக காத்திருந்த ஹர்ஷவர்தனுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம்.
  • மரணம் துரத்த.. தனது இளம் மனைவியிடம் பேசி விவாகரத்து பெற்றுள்ளார்.
  • இன்னும் சில மணி நேரங்களில் தான் மரணம் அடைந்து விடுவேன்.
மரணம் குறித்து தெரிந்ததும் இளம் மருத்துவர் செய்த செயல்..! கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி கதை! title=

Telangana Doctor Life Story: தெலங்கானா மாநிலம் கம்மன் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தான் ஹர்ஷவர்தன். 34 வயதான இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20-ம் தேதி திருமணம் நடந்த நிலையில், 9 நாட்களில் ஹர்ஷவர்தன் மீண்டும் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தனது மனைவியை அங்கு அழைத்துச் செல்ல தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவியின் விசாவுக்காக காத்திருந்த ஹர்ஷவர்தனுக்கு அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடிரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். மருத்துவரான இவர், உடனே முழு உடல் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஹர்ஷவர்தன் தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனே உடைந்து போகாமல், அவர் அடுத்தடுத்து செய்த வேலைகள் தான் இன்று அவரை பலரும் கொண்டாட காரணமாகியுள்ளது. 

தனது மரணத்தை கணித்த அவர், தனது மனைவி இளம் கைம்பெண் ஆகக்கூடாது என்பதற்காக அவரிடம் பேசி விவாகரத்து பெற்றுள்ளார். அதோடு அவருக்கு தேவையான பொருளாதார ஏற்பாடுகளையும் இன்சூரன்ஸ் மூலம் செய்து கொடுத்துள்ளார். மகனுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பெற்றோர் சிகிச்சைக்காக இந்தியா வரச் சொல்லி கெஞ்சியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் சிறப்பான சிகிச்சை கிடைப்பதாகக் கூறி, அங்கே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதோடு பெற்றோர்களிடம் வீடியோ காலில் பேசி அவர்களை தேத்தியுள்ளார். 

மேலும் படிக்க: ஸ்கூல்ல இருந்து ஒண்ணாதான் இருப்பாங்க.. குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதை!

எப்படியும் இரண்டு ஆண்டுகள் தான் தனது ஆயுட்காலம் என்பதை அறிந்து தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனது இறப்புக்கு பின் தேவையான வேலைகளையும் ஹர்ஷவர்தன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அதிகாரிடம் பேசி, இறந்த பின் தன் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு தேவையான பணத்தையும் முன்பே செலுத்தியுள்ளார். 

Interesting Story In Tamil

அதோடு தனது உடலை எடுத்துச்செல்ல 3 லட்சம் ரூபாய் செலவில் சவப்பெட்டியையும் முன்பே ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்த சூழலில் தான் அவரது உடல்நிலை கடந்த மாதம் மிகவும் மோசமாகியுள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி தனது நண்பர்களை தொடர்பு கொண்ட அவர், இன்னும் சில மணி நேரங்களில் தான் இறக்க உள்ளதாகக் கூறி ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகள் படி நடக்க அறிவுறுத்தியுள்ளார். அதேபோல அன்றே அவர் நுரையீரம் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அவர் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த சவப்பெட்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. 

மேலும் படிக்க: திருமண பரிசில் வெடிகுண்டு! பெண்ணின் முன்னாள் ஆண் நண்பரால் மாப்பிள்ளை பலி! நடந்தது என்ன?

அவரது இறுதிச்சடங்கு கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதன்பிறகு இந்த செய்தி குறித்து ஹர்ஷவர்தன் நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது. தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என திட்டமிட்டு அனைத்தையும் செய்த ஹர்ஷவர்தன் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என நெட்டிசன்கள் தங்கள் இரங்கலை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: என்னா மனுஷன்பா..!விவசாயத்தில் அசத்தும் ’பொல்லாதவன்’ கிஷோர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News