பாம்பின் தலையைக் கடித்து பழிக்கு பழி வாங்கிய விவசாயி!

உத்தரப்பிரதேசத்தில், விவசாயி ஒருவர் தன்னைக் கடித்த பாம்பின் தலையைக் கடித்து பழிக்கு பழி வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Feb 21, 2018, 02:48 PM IST
பாம்பின் தலையைக் கடித்து பழிக்கு பழி வாங்கிய விவசாயி!  title=

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது பண்ணையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி அந்தப் பாம்பின் தலையைக் கடித்துத் துண்டித்துள்ளார். பாவம் அந்தப் பாம்பு, விவசாயி கடித்ததில் பரிதாபமாக உயிரை விட்டது. 

இதன் பின்னர், பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு சென்ற விவசாயிக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சைக்குப் பின்னர் விவசாயியின் உடல்நிலை சீராக உள்ளது.

இந்த செய்தி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News