உ.பி.,யில் பாலியல் வன்கொடுமை!

Last Updated : May 28, 2017, 04:39 PM IST
உ.பி.,யில் பாலியல் வன்கொடுமை! title=

உத்தர் பிரதேசத்தில் நடுரோட்டில் 2 பெண்களை 14 சிறுவர்கள் மானபங்க படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற 2 பெண்களை, அங்கிருந்த 14 சிறுவர்கள் மானபங்க படுத்தினர். தங்களை விட்டுவிடுமாறு, அந்த பெண்கள் கெஞ்சியும் அதனை பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள், அவர்களின் கையை பிடித்து இழுத்தும், மானபங்கபடுத்தியும், கிண்டல் செய்தனர். 

இந்த சபவத்தால் பயந்த நிலையில் இருந்த அந்த பெண்கள் தங்களை விட்டுவிடும் படி அழுத நிலையில் கெஞ்சி கொண்டிருந்தனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். 

இந்த வீ டியோ வேகமாக வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என போலீசார் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 15 நாளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News