கொடூரம்!!காரில் இளம் பெண் கற்பழிப்பு; நொய்டாவில் தூக்கி வீசப்பட்டார்

Last Updated : Jun 20, 2017, 12:12 PM IST
கொடூரம்!!காரில் இளம் பெண் கற்பழிப்பு; நொய்டாவில் தூக்கி வீசப்பட்டார் title=

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பழிப்பு குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அரியானா மாநிலம் சேர்ந்த சோனா ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை வேகமாக வந்த காரில் இருந்த கும்பல் கடத்திச் சென்றது. அந்த பெண்ணை ஓடும் காரிலேயே வைத்து காரில் இருந்தவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் அந்தப் பெண்ணை காரில் இருந்து ரோட்டில் வீசி விட்டு சென்று விட்டனர்.

அங்கிருந்த மற்றவரிகளின் உதவியுடன் குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அந்த பெண் சென்றடைந்தாள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை.

பாதிக்கபட்ட பெண் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்தவர். இவர் சோனாவில் தங்கள் உறவினர் பார்க்க வந்து உள்ளார்.

நொய்டா போலீசாருக்கு இந்த சம்பவம் தெரியவர பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க குருகிராம் செற்றுள்ளனர். 

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு நிர்பியா மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News